நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தபடி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா ஆகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபா ஆகவும் மாற்றம் பெற்றுள்ளது.

மேலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 340 ரூபா ஆகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டு இதன் புதிய விலை 245 ரூபாவாகவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இதே அளவான மாற்றங்களை தாமும் செய்வதாக லங்கா ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply