யாழில் கசிப்பு அருந்திய இளைஞன் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்தமையால் அவரது உறவினர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கசிப்பு அருந்திய நிலையிலையே நிறை போதையில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை , புங்குடுதீவு பகுதிகளில் கசிப்பு உள்ளிட்ட போதை பொருள் பாவனைகள் அதிகரித்து உள்ளதாகவும் கசிப்பு உள்ளிட்டவை வன்னி பிரதேசங்களில் இருந்து அங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாவும் தெரியவந்துள்ளது.

எனினும் அவ்வாறு கசிப்பை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply