பாணந்துறையில் வாளால் தாக்கப்பட்டவர் பலி

பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு இளைஞரொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.

பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக ஓர் இளைஞன் வாளால் தாக்கப்பட்டுள்ளதாவும் தாக்குதலுக்குள்ளான இளைஞன் காயங்களுடன் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓடிவந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர்கள் ஆடைத்தொழிற்சாலைக்குள் நுழைந்து குறித்த இளைஞனை வாளால் தாக்கிய சிசிடிவி கமரா பதிவும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தலையில் பலதடவை தாக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே அmந்த இளைஞன் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

கொலையைச் செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply