வடக்கு கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்பு தொடருமானால் இந்தியாவை நாடுவோம்!

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தொடருமானால் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள பல இந்து அமைப்புகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்திய இந்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தாலும் இறுதித் திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply