இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து! இரங்கல் தெரிவித்தார் ரணில்

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிலையில், இவ் விபத்து தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் ,
துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் ,மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் என உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்திராத விதமாக இப் பாரிய விபத்துக்கு முகம்கொடுத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு வலிமையும், தைரியமும் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி விசேட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து தொடர்பான தகவல்களுக்கு :- இந்தியாவை உலுக்கிய கோர விபத்து – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply