11 வயது மகளைச் சீரழித்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை

இலங்கையில், தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், 6 இலட்சம் ரூபா நட்டஈடும், 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான தந்தை 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, தனது தந்தை மதுபோதையில் வந்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்கின்றார் என்று அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply