காவல்நிலையத்தினுள் மோதிக்கொண்ட இரு குழுக்கள்

விசாரணைகளை மேற்கொள்வதற்காக காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் குழுவும், பிரதிவாதிகள் குழுவும் காவல்நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஹிக்கடுவ காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

வெலிகம கடற்கரையில் படகொன்று சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த நபர்கள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இரண்டு குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply