கஜேந்திரகுமாரை வாக்குமூலம் வழங்க நிர்ப்பந்திப்பது சட்ட விரோதமானது!

தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை நாடாளுடன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினமே மருதங்கேணி பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பது சட்டவிரோதமானது எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரை கைது செய்யும் நடவடிக்கை நாடாளுமன்ற சிறப்பரிமையை மீறுகிற செயல் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு நடைபெறுகின்ற வேளையில் அதில் கலந்து கொள்வதை தடுக்கும் இத்தகைய செயற்பாடு சட்டவிரோதமானதும் அடக்குமுறையின் வெளிப்பாடு என்றும் அவர் வலியறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply