கொழும்பு அவிசாவளைப் பகுதியில் விபத்து

கொழும்பு அவிசாவளை வீதியின் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், இரண்டு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நவகமுவ மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை அவிசாவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply