கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள்

கனடாவில்  பெரும் பகுதிகளைப் பாதிப்புக்குள்ளாக்கிய கியூபெக் காட்டுத்தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் தீயணைக்கும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறான நிலையில், தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சிக்கு அந்நாட்டு அரசாங்கம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து , குறித்த பகுதியிலிருந்து, பிற இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட மக்களை விரைவில் வீடுகளுக்கு அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1500 அமெரிக்க டொலர்கள் வரை வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கத்தால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply