ஆட்சியாளர்களைப் போன்றே மாணவர்களும் செயற்படுகின்றனர்!

இலங்கை நாடாளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே தற்போது பாடசாலை மாணவர்களும் செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள், பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பாடசாலைகளுக்கு சேதம் விளைவித்ததோடு பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தாக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கல்வியில் தொடர்ந்தும் சீர்திருத்தம் செய்யப்படாத காரணத்தினாலேயே இந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமொன்றை முன்வைக்க தயாராகி வருகின்றனர். இவற்றை முன்வைக்க முயற்சிப்பவர்கள் நல்லவர்கள் அல்ல.

ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்துபவர்கள், கப்பம் கட்டுபவர்களே இதற்கு துணை நிற்பதாக தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவை விரட்டி விட்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க அவருடைய விருப்பத்தின்படி உத்தரவுகளையும் சட்டங்களையும் கொண்டு வர முடியாது எனவும் நாடு சுபிட்சமாக இருப்பதாக காட்ட முயல்வது பலிக்காது எனவும் தெரிவித்தார்.

பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆரம்பமாகியும் இதுவரை சீருடைகள், பாடப்புத்தகங்கள் முறையாக வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் டெங்கு நோய் பரவும் நிலை காணப்பட்டு அவற்றிற்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமலும், பாடசாலை துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமலும்  உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply