இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கலிருந்து விடுதலையாகியுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் தற்போது அவர்கள் தமிழகம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே, சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி பல மேன்முறையீடுகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்த நிலையில், கடந்த வருடம் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டடிருந்தனர்.
முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் இலங்கையைச் சேர்ந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வீதலை செய்யப்பட்ட தன் மகனை சிறப்பு முகாமிலிருந்து மீட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு சாந்தனின் தாயார் நரேந்திர மோடியிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.