பாரிஸ் கழக உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு அடுத்தவாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த வாரம் பாரிஸ் கழக உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் கருத்துத் தெரிவித்த குணவர்தன, ஜனாதிபதி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாரிஸ் கழக உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் இணையவழி ஊடாக முதல் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜப்பான், இந்தியா மற்றும்பிரான்ஸ் நாடுகள் இணைந்துகொண்ட குறித்த சந்திப்பில்,சீனாவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply