உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்! நிபந்தனையுடன் புடின் அறிவிப்பு

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமாயின் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாஸ்கோவில் இராணுவம் தொடர்பான இணையதள பிளாக்கர்களுடன் உரையாடிய புடின், ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆயினும், டிரோன் மற்றும் துல்லிய தாக்குதல் தொடர்பான ஆயுத தயாரிப்பில் பின்னடைவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply