12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயது மாணவி ஒருவருக்கே குறித்த 42 வயதான ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த மாணவி இது தொடர்பில் தன் தாயாரிடம் முறையிட்டதையடுத்து தாயார் பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த ஆசிரியர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, கைதான ஆசிரியர் ஏற்கனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply