கிறீஸ் படகு விபத்து- 79 பேர் பலி

லிபியாவிலிருந்து இத்தாலிக்கு 400 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மிகப் பயங்கரமான விபத்துக்களில் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தையடுத்து, கிறீசின் அதிகாரிகள் மீட்டுபணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply