ஏழு பெரல்களில் 1,300 லீற்றர் எத்தனோல் கடத்தல் : ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி எத்தனோல் கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் எகொட உயன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எகொட உயன பிரதேசத்தில் ஏழு பெரல்களில் 1,300 லீற்றருக்கும் அதிகமான எத்தனோலை லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே பொலிஸாரினால் கைப்பற்றி உள்ளனர்.

சந்தேக நபரிடம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply