இலங்கையில் 75 பேர் அதிரடியாக கைது – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இவ் வருடத்தில் , சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து குறித்த புகார்கள் தொடர்பாக 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றில் சமூக ஊடகங்கள் தொடர்பான 108 புகார்களும் , பிற இணைய ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட நிதிக் குற்றங்கள் தொடர்பான புகார்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பப்படும் சலுகைகள் குறித்தும் விளம்பரப் பொருட்கள் தொடர்பான குறுஞ்செய்திகள், மற்றும் மின்னஞ்சல்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தெரியாத நபர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம், தனிப்பட்ட தகவல்களை பரிமாறுவதை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply