பொருளாதார அரசியல் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கு ஈரான் விடுத்துள்ள வலியுறுத்தல்!

இலங்கை – ஈரானுக்கு இடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகளின் மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பில்  ஈரான் அமைச்சர், வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பல ஆற்றல்கள் இருப்பதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார கூட்டு ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஈரானிய எரிசக்தி அமைச்சர் அலி-அக்பர் மெஹ்ராபியன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கூறிய குறிக்கோளை பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றுவதற்காக ஒரு கூட்டு பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணைக்குழுவை நிறுவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆணைக்குழு தொடங்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உகந்ததாக அதிகரிக்க உதவும் எனவும் ஈரானிய எரிசக்தி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply