பண்டதரிப்பு பகுதியில் வீடு உடைத்து 19 பவுண் நகை கொள்ளை!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் 63 வயதுடைய பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் நேற்றிரவு அவரின் வீட்டினை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அவரை மிக மோசமாக தாக்கி, வீட்டில் உள்ள நகைகளை தருமாறு துன்புறுத்தியுள்ளதுடன் வீடு முழுவதும் தேடி 19 பவுண் நகைகளையும் ஒரு தொகை பணத்தினையும் கொள்ளையடித்ததுடன் குறித்த பெண்னையும் தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த பெண் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் இளவாலை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் கொள்ளையர்களுடையது என சந்தேகிக்கப்படும் மாதிரிகளையும் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply