டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மாயம் – தேடும் பணிகள் முன்னெடுப்பு

அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் 5 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்மூழ்கிக் கப்பல் நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதிக்கு அருகில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காணமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply