நாட்டில் மின் தடை ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை நளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை மின்சார சபை சார்ந்த அனைத்து வேலைத்தளங்களினதும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாளைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இலங்கையில் மின்தடை ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களையும் நாளைய தினம் கொழும்புக்கு அழைக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply