சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!

அம்பாறை சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊருடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: நூருல் ஹுதா உமர்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply