மீண்டுமொரு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் உலகத் தலைவர்கள்!

சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஏற்ற வகையிலேயே செயற்படுகின்றது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் மற்றுமொறு உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளரான லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியில் சர்வதேச அரசியலுக்கான அதிகாரப்போட்டியில் இலங்கை பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குள் நாம் ஒரு சிறிய நாடாக இருந்து சிதறிப்போகும் நிலைமை உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டிலுள்ள இளம் யுவதிகளின் வாழ்வை சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் இழுத்துப் போடுவதற்கு ரணில் ராஜபக்சவினருக்கு என்ன உரிமை உள்ளது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply