ஊடகங்களை அடக்குவது எமது நோக்கமல்ல – மனுஷ நாணயக்கார

ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலான சரத்துக்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சரியான தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் உரிமையும் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு விடயங்களையும் முன்னிலைப்படுத்தியே தாம் இந்த சட்டமூலத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாரேனும், பிழையான தகவல்களை வழங்கினால், அதற்கான ஒரு நெறிமுறையை கொண்டு வருவதற்கே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தைக் கொண்டுவர கடந்த காலங்களிலும் ஆராயப்பட்டது எனவும், 1997 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடவும் தயாராகவே உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply