இரணுவ பேருந்துடன் மோதி 3 வயது சிறுமி பலி!

இரணுவத்தினர் பயணித்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரைகம கலகட வீதி பகுதியைச் சேர்ந்த இசதி தெனெத்மா சபுகே என்ற மூன்று வயது சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், சிறுமியுடன் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பண்டாரகம கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் உடனடியாகச் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், இருப்பினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply