இலங்கை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழி – வழங்கப்பட்ட விசேட அங்கீகாரம்!

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரை ஆற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஊடாக குறித்த பாடத்திட்டத்திற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து ஆரம்ப பிரிவினருக்கு அடிப்படை மட்டத்திலும் தரம் 6 இலிருந்து ஜப்பானிய மொழியை ஒரு பாடமாக கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply