புதிய PUCSL தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மின்சாரம் தடைப்பட்ட காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீண்ட காலமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மே மாதம் ஜனக ரத்நாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய PUCSL தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் மே 24 ஆம் திகதி , பாராளுமன்ற உறுப்பினர்கள், ரத்நாயக்கவை PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரும் பிரேரணையை 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply