மோட்டார் சைக்கிள் விபத்து- குழந்தை பலி

ரிதிமாலியத்த கால்வாய் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும், அவரது மனைவியும், குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply