எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் மதுவரி திணைக்களத்துக்கு பின்னடைவு!

மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவை சந்தித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கூடிய தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் மேற்பார்வைக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 217 பில்லியன் ரூபா வருமானத்தை மதுவரி திணைக்களம் எதிர்பார்த்த போதிலும், ஜூன் மாதத்திற்குள் 72.98 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பன குறைந்துள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply