அமெரிக்காவில் ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் அதன் மீது பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஸ்டில்வாட்டர் பகுதியில் உள்ள யெல்லோஸ்டோன் ஆற்றின் மீது கட்டப்பட்ட ரயில் பாலத்தின் மீது,  வீதி அமைப்பதற்கான கலவையை ஏற்றிக் கொண்டு ரயில் சென்றபோது விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலில் இருந்த கலவை ஆற்றில் சிதறியதால், ஆற்றிலிருந்து குடிநீர் எடுக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலம் இடிந்ததில், இணைய தொடுப்பு கம்பிகளும் சேதமடைந்துள்ளதால், இணைய சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து குறித்து அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply