தியகல மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மண் திட்டு சரிவு

மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் கினிகத்தேன கொழும்பு வழியாக ஹட்டன் மஸ்கெலியா நோட்டன் வரும் வாகனங்கள் தற்காலிகமாக மாற்று வழியைப் பயன்படுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில், காலை 10.30 மணியளவில் பெய்த மழையால் இந்த மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் மண் சரிவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

சரிந்த மண் திட்டை அகற்ற நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வேலைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply