யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று காலை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்துள்ளார்.

அதனையடுத்து, யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

யாழ் ஆயருடனான சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply