கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும், சர்வதேசத்திடம் நீதி கோரிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply