கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற குழு ஒப்புதல்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழு சற்று முன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இரண்டாவது நாளாக இன்று (30) பரிசீலிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு குழு அங்கீகாரம் வழங்கியதாக அதன் உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றியக் குழு நேற்று (29) கூடி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பூர்வாங்க முன்மொழிவு குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று, இது தொடர்பான அதிகாரப்பூர்வ முன்மொழிவு நிதிக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படவிருந்தது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply