துன்பத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவர்! ரணிலுக்கு புகழாரம்

துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதிக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” அஸ்வெசும திட்டம் தொடர்பில் இதுவரை 4 இலட்சத்து 91 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன மற்றும் 6 ஆயிரத்து 773 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன .

குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் பரிசீலனை நடத்தப்பட்டு குறைந்த வருமானம் பெறும் பயனாளிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் ” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply