மன்னார் கடற்பரப்பில் மீனவர் மாயம்!

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று மீன் பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவாசம் எனும் 57 வயது மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மிட்கப்பட்டுள்ளார்.

காணாமல்போன மற்றைய மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 37வயதுடைய விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்ட சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply