காலியில் கோரவிபத்து – தாயும் மகளும் பலி !

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

விடுமுறை நாட்களுக்காக சுற்றுலா சென்று கரந்தெனிய பிரதேசத்திலுள்ள அவர்களது வீட்டுக்குக் காரில் வந்துகொண்டிருந்த போது குறித்த கார் வீட்டிற்கு 500 மீற்றர் தொலைவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த கார் கனரக வாகனத்துடன் மோதியதில் காரிலிருந்த 38 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காரை செலுத்திய 42 வயதுடைய தந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply