நாய் குறுக்கே பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலி!

காலி – கொழும்பு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நாய் ஒன்று மோதியதனாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் தடல்ல வலவத்தையைச் சேர்ந்த 59 வயதுடைய சுதத் நிஹால் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த தந்தை தனது 32 வயதுடைய மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, தடல்ல மயானத்துக்கு அருகில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளின் குறுக்கே பாய்ந்துள்ள நிலையில் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் கீழே வீழ்ந்துள்ளது.

இதேவேளை, பின்னால் வந்த காலி – கொழும்பு தனியார் பேருந்து ஒன்று கீழே விழுந்த தந்தையை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பேருந்து சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply