தபால்மா அதிபரை தாக்கிவிட்டு பணத்தை திருட முற்பட்ட நபர் தப்பியோட்டம்!

தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் ஒன்று மெதகொடவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தின்போது சந்தேக நபரை பிடிக்க முற்பட்ட வேளையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக கொத்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்ததுடன் மெத கொட்வில தபால் நிலையத்திற்குள் வந்து தபால் மா அதிபரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தபால் நிலையத்திற்குள் நுழைந்த சந்தேக நபர், அங்கிருந்த பணத்தை திருட முயன்றுள்ளவேளை , ​​போஸ்ட் மாஸ்டர் அவருடன் சண்டையிட்டு பணப்பையை காப்பாற்றியுள்ள நிலையில் அதில் அறுபதாயிரம் ரூபாய்க்கும் அதிக பணம் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட தபால் மா அதிபர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கொத்வில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply