இந்திய உள்ளூராட்சி தேர்தலில் வன்முறை – 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலில் இடம் பெற்ற வன்முறையின் போது 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று, இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டதில் வாக்குச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல்  நடைபெற்றதாகவும் ஊரகப் பகுதிகளில் 73,887 இடங்களில் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply