மற்றுமொரு பேருந்து விபத்து – 8 பேர் வைத்தியசாலையில்!

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் விபத்துக்குள்ளகியுள்ளது.

குறித்த விபத்தில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவருகின்றது என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று இரவு பொலனறுவை – மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் பேருந்து ஓன்று மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்கள் – மன்னம்பிட்டியில் கோர விபத்து – பாலத்தில் கவிழ்ந்த பேருந்து! 10 பேர் பலி

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply