மன்னம்பிட்டியில் கோர விபத்து – பாலத்தில் கவிழ்ந்த பேருந்து! 10 பேர் பலி

கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பேருந்து ஓன்று மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலனறுவை – மன்னம்பிட்டி பலகை பாலத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது காத்தான்குடியைச் சேர்ந்த பேருந்து எனவும் இதில் 40 பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply