பெற்றோரை ஏமாற்றிய 3 பள்ளி மாணவிகள் இறுதியில் நேர்ந்த சோகம்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விகற்கும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று காதல் ஜோடிகள் கடந்த வாரம் சூக்கிரி எல்லையை பார்வையிடுவதற்குச் சென்றுள்ள நிலையில் மூன்று காதலர்களும் மாணவிகளை அருகிலுள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாணவிகள் மூவரும் , பாடசாலைக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிவிட்டு காதலர்களுடன் சென்றுள்ள நிலையில், அவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்ற தகவல் பெற்றோருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதை அடுத்து மாணவிகள் தத்தமது வீடுகளுக்கு திரும்பிய வேளை அவர்களிடம் விசாரித்த போதே மேற்படி குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மாணவி ஒருவரின் தந்தையின் முறைப்பாட்டின் அடிப்படையில் , மூன்று காதல் ஜோடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply