இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள்

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது, வடக்கு மாகாண போக்குவரத்துச் சபைக்கென 24 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, வவுனியாவுக்கு 4 பேருந்துகளும், கிளிநொச்சிக்கு 4 பேருந்துகளும், மன்னாருக்கு 3 பேருந்துகளும், முல்லைத்தீவுக்கு 3 பேருந்துகளும், யாழ்ப்பாணத்துக்கு 4 பேருந்துகளும், பருத்தித்துறைக்கு 3 பேருந்துகளும், காரைநகருக்கு 3 பேருந்துகளுமாக  24 பேருந்துகளும் பகிரப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத் திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.அல்விஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெட்டகொட, ரகுமான் மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply