பணமோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!

புல்மோட்டை பகுதியில் வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புல்மோட்டை காவல் நிலையத்தில் பெண்ணொருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தே குறித்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply