அச்சுவேலிப் பகுதியில் வாள்வெட்டு – மூன்று பிள்ளைகளின் தாய் காயம்

மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு, அச்சுவேலிப் பகுதியிலுள்ள வீடொன்றின் ஜன்னல், கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெற்றோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில், வீட்டில் இருந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான நந்தகுமார் சுதர்ஷினி என்ற பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply