போராட்டத்தில் இறங்கியுள்ள விமான நிலைய ஊழியர்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமான நிலைய ஊழியர்கள் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சம்பள உயர்வைப் பெற்றுள்ளதாகவும், சேவை அரசியலமைப்பின் படி விமான நிலைய ஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை என்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.டி.எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply