யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply