இலங்கைக்கு கடத்தவிருந்த பெற்றோல் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

தமிழகம் தூத்துக்குடி பகுதியிலிருந்து  400 லீற்றர் பெற்றோலை இலங்கைக்கு கடத்த முயன்ற படகு ஒன்றை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பகுதியில்   நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வடபாகம் பொலிஸார், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் அதில் 9 கொள்கலன்களில்  400 லீற்றர் பெற்றோல்  பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையை கண்டறிந்தனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம்  முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் மூலம், குறித்த பெற்றோலை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply